ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகித்த நிலையில், இலங்கைக்கு எதிராக குறித்த தீர்மானத்தை கொண்டு வர முன்னின்று செயற்பட்ட அமெரிக்கா தற்போது மனித உரிமை பேரவையிலிருந்து விலகியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்கா மனித உரிமை பேரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அரசியல் பாகுபாடுகள் உள்ளதாக தெரிவித்தே அமெரிக்கா அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது.
30/1 தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா தற்போது மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தினாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.